Home கனடா றொரன்டோ தீ விபத்துச் சம்பவத்தில் ஒருவர் பலி

றொரன்டோ தீ விபத்துச் சம்பவத்தில் ஒருவர் பலி

by Jey

றொரன்டோவின் அடுக்கு மாடி குடியிருப்பில் இடம்பெற்ற தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தீ விபத்துச் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

றொரன்டோவின் டுன்டாஸ் மற்றும் செர்போர்ன் ஆகிய நகரங்களுக்கு இடையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அடுக்கு மாடி கட்டடத்தின் சில மாடிகளில் புகை மண்டலம் நிலவியதாக தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

60 முதல் 80 தீயணைப்பு படையினர் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.

சுமார் 40 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

related posts