கனடிய பிரஜை ஒருவருக்கு, அமெரிக்காவில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடிய சிறையொன்றிலிருந்து மிகவும் ஆபத்தான போதைப் பொருளை பல நாடுகளுக்கு விநியோகம் செய்துள்ளதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபேக் மாகாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர், பென்டய்ல் என்ற போதை மருந்து விநியோகம் செய்தார் என தெரிவிக்கப்படுகிறது.
மொன்றியலைச் சேர்ந்த 43 வயதான் சான் நக்யுயின் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.