கனடாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பெரும்பாலான கனடியர்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனயடியர்கள் ஊட்டச்சத்துடைய உணவுப் பொருட்களை விடவும் பொருட்களின் விலையினை முதலில் அறிந்த பின்பே பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அண்மையில் ஹாலிபிக்ஸில் அமைந்துள்ள Dalhousie பல்கலைக்கழகத்தின் உணவு விவசாய ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
போஷாக்கான உணவுகளை விட்டுக் கொடுப்பதனால் நீண்ட காலத்தில் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்ற கரிசனை உண்டு என கருத்துக்கணிப்பில் பங்கு பற்றிய 63 விதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.