Home உலகம் மோனா லிசா ஓவியத்தை சேதப்படுத்த முனைந்த பெண்கள் கைது

மோனா லிசா ஓவியத்தை சேதப்படுத்த முனைந்த பெண்கள் கைது

by Jey

பிரான்ஸில் உள்ள புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது சூப்பை ஊற்றி சேதப்படுத்த முனைந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனா லிசா ஓவியம் தற்போது பிரான்ஸ் தலைநகரத்தின் லோவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஓவியத்தின் மேல் சூப்பை வீசிய போதிலும் அதற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.

ஏற்கனவே பிரான்ஸ் அரசு ஓவியத்தை பாதுகாக்கும் நோக்கில் தடுப்பு ஒன்றையும் அதையும் தாண்டி குண்டு துழைக்காத கண்ணாடி பேழை ஒன்றையும் அமைத்துள்ளது.

இதனால் ஓவியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓவியத்தை சேதப்படுத்த முனைந்த குற்றச்சாட்டில் கைதான இரண்டு பெண்களும், சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

related posts