என்னால் 24 மணிநேரத்திற்குள் உக்ரேன் – ரஷ்யா யுத்தத்தை நிறுத்த முடியும் என ஐக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2024 இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும் இந்த இரு நாடுகளுக்குமிடையேயான போர் முடிவுக்கு வரவில்லை என்றால், தேர்தலில் அதிபராக என்னைத் தேர்வு செய்தால், 24 மணிநேரத்திற்குள் இந்தப் போரை முடிவுக்கக் கொண்டு வருவது எனக்கு மிக இலகுவான காரியம் என ட்ரம்ப் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன். அது தொடர்பான விடயங்களை இரகசியமாக வைத்திருக்கிறேன் எனவும் அவர் கூறினார். மேலும் அதைப் பகிரங்கப் படுத்தினால் என்னால் அதைப் பயன்படுத்த முடியாமல் போகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்