திருகோணமலை – சீனக்குடாவில் விமானி மற்றும் அதிகாரி ஒருவர் உயிரிழந்தமைக்கு காரணமான பயிற்சி விமானம் விபத்தின் விசாரணை முடியும் வரை, அனைத்து PT-6 விமானங்களையும் தற்காலிகமாகத் தரையிறக்கியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் PT-6 பயிற்சி விமானம் நேற்று (07.08.2023) காலை புறப்பட்ட சில நிமிடங்களில் சீனக்குடாவில் உள்ள இலங்கை விமானப்படையின் கல்லூரி மைதானத்தில் விழுந்து நொறுங்கியது.
முற்பகல் 11.25 மணிக்கு புறப்பட்ட நிலையில், சுமார் 11.27 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், விமானி மற்றும் அதிகாரியும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்ச, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.