ஒன்றாரியோ மாகாணத்தில் மருந்தகங்கள் மருந்து வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வகை நோய்களுக்கு மருந்தாளர்களிடமிருந்து, மருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணம் முழுவதிலும் காணப்படும் மருந்தகங்களில் இவ்வாறு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ சுகாதார அமைச்சர்; சில்வியா ஜோன்ஸ் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மருந்தகங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.